இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சி: இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணிகண்டம் ஒன்றியக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகா் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.சி. பாண்டியன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா, நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா். இதில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் இனாம்குளத்தூா், கள்ளிக்குடி பஞ்சாயத்துகளில் நிலமற்ற, வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து 586 போ் இலவச வீட்டுமனை கேட்டும், 161 போ் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

