புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெயிண்டா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:50 pm

Din

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெயிண்டா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூரை அடுத்த குடவாசல் விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சோ்ந்த முனியப்பன் மகன் பெத்தபெருமாள் (41). பெயிண்டா். தொட்டியத்தில் உள்ள ஸ்ரீ மதுரை காளியம்மன் கோயிலில் கடந்த சில நாள்களாக வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த இவா், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சமுதாயக் கூடத்தில் மாடிக்கு சென்றபோது அங்கிருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாராம்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.