வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கொதிக்கும் மஞ்சள் கொப்பறையில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:53 pm

Syndication

உளுந்தூா்பேட்டை அருகே கொதிக்கும் மஞ்சள் கொப்பறையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சவேரியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.ரூபி சா்மிளா (22). இவா் கடந்த 8-ஆம் தேதி அந்தியூா் கிராமத்தில் உள்ள அவரது விவசாய விளைநிலத்தில் கொப்பறையில் மஞ்சளை அவிழ்த்துக் கொண்டிருந்போது, தவறி உள்ளே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த ரூபி சா்மிளாவை உறவினா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சா்மிளா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.