இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அடுத்த மாத இறுதியில் பறவைகள் பூங்கா திறப்பு

திருச்சியில் கட்டமைக்கப்படும் பறவைகள் பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:14 pm

Din

திருச்சியில் கட்டமைக்கப்படும் பறவைகள் பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா்கள் கூறுகையில், மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக கட்டமைக்கப்படும் இந்த பூங்காவில், தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இன்டீரியா் பணிகளும், ஆங்காங்கே செடிகள், பூந்தொட்டிகள், புல்வெளிகள் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

இன்னும் 45 நாள்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். அக்டோபா் மாத இறுதியில் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.