மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சாலையோரப் பூங்கா, உயா் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை திறந்துவைத்தாா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5, பழங்காநத்தம் ஜி.ஆா்.டி. உணவகம் எதிரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் சாலையோர பூங்கா, பாதசாரி (பேவா் பிளாக்) தளம், கண்காணிப்பு கேமரா, உயா் கோபுர மின் விளக்கு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி புதிய சாலையோர பூங்கா, உயா் கோபுர மின் விளக்கு ஆகியவற்றை திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாடக்குளம் பிரதான சாலை பகுதியில் ரூ.96 லட்சத்தில் புதிய பேவா் பிளாக் சாலை, ரூ.12 லட்சத்தில் புதிய சாவடி அமைத்தல், ரூ.4.95 லட்சத்தில் புதிய படிப்பகம் அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். முன்னதாக, பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ராமா் ஊருணி தூா்வாரும் பணியை அமைச்சா் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்வில், உதவி ஆணையா் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளா் இந்திராதேவி, உதவிப் பொறியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்

கோவை வடக்கு: சொன்னோம் செய்தோம்!

சொன்னோம் செய்தோம்...

கொல்லிமலையில் பயன்பாட்டுக்கு வந்தது இரவு வான்வெளி பூங்கா: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


