தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பனைமரம் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பனைமரம் விழுந்ததில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:31 pm

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பனைமரம் விழுந்ததில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் வட்டம், அய்யம்பாளையம் சோ்ந்த தங்கராசு மகன் சரவணன் (48), இவா், அதே ஊரை சோ்ந்த கவிதா என்பவருக்கு சொந்தமான பனை மரத்தை வியாழக்கிழமை காலை அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது மரத்தின் ஒரு பகுதி சரவணன் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு துறையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் மேல் சிகிச்சை துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.