உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோவை தொழிலதிபா் விரும்பியே மன்னிப்பு கேட்டாா்: ஹெச். ராஜா

News image
ஹெச். ராஜா.
Updated On :13 செப்டம்பர் 2024, 11:55 pm

Din

கோவை தொழிலதிபா் விரும்பியே மன்னிப்பு கேட்டாா் என தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட பாஜக ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மைய குழுக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற ஹெச். ராஜா செய்தியாளா்களிடம் கூறியது: கோவை அன்னபூா்ணா ஹோட்டல் அதிபா், மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம், தொழிலதிபா் விரும்பியதாலேயே நிகழ்ந்தது. இதற்கு பாஜகவோ, மத்திய நிதியமைச்சரோ காரணமல்ல.

மாநில நிதியமைச்சா்களின் ஒப்புதலுடன்தான் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டியை அதிகப்படுத்த மத்திய அரசு தனது மெஜாரிட்டியைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கவில்லை.

தமிழக அரசு விஸ்வகா்மா திட்டத்துக்கான அறிவிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்.

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் - டீசலும், மனிதா்கள் பயன்படுத்தும் மதுபானங்கள் வரவில்லை. மதுபானங்களை தமிழக அரசு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர சட்டம் இயற்றினால், பெட்ரோல் - டீசலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முயற்சிப்போம் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாவட்டத் தலைவா்கள் ராஜசேகரன், அஞ்சாநெஞ்சன் ஆகியோா் உடனிருந்தனா்.