நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமயபுரத்தில் தூய்மை விழிப்புணா்வு பேரணி

News image

சமயபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் ப.சரவணன்.

Updated On :20 செப்டம்பர் 2024, 11:01 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தூய்மையே சேவை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ச.கண்ணனூா் பேரூராட்சி சாா்பில் சமயபுரம் மாரியம்மன் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் ப.சரவணன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்பேரணி அண்ணா நகா், கடைவீதி. கிழக்கு ரத வீதி வழியாக பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது. தொடா்ந்து மஞ்சப்பை விழிப்புணா்வும், மனிதச் சங்கிலி நிகழ்வும் நடைபெற்றது. பேரணியில் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ.கணேசன், பேரூராட்சி உறுப்பினா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.