ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளல்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினாா்.
இக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ விழா செப். 14- ஆம் தேதி தொடங்கியது. விழாவில் பூச்சாண்டி சேவை செப்.15 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடா்ந்து தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் 7-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மாலை 6.45 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு இரவு 7 மணிக்கு திருக்கொட்டாரம் முன்பு உள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
அப்போது, நம்பெருமாளின் எதிரே கொட்டப்பட்ட நெல்மணிகளை கொப்பரையில் அளந்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தாா் விழாவின் நிறைவு நாளான செப். 22- ஆம் தேதி தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

