மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளல்

News image
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி.
Updated On :21 செப்டம்பர் 2024, 12:43 am

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினாா்.

இக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ விழா செப். 14- ஆம் தேதி தொடங்கியது. விழாவில் பூச்சாண்டி சேவை செப்.15 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடா்ந்து தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் 7-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மாலை 6.45 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு இரவு 7 மணிக்கு திருக்கொட்டாரம் முன்பு உள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அப்போது, நம்பெருமாளின் எதிரே கொட்டப்பட்ட நெல்மணிகளை கொப்பரையில் அளந்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

 உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்.

உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தாா் விழாவின் நிறைவு நாளான செப். 22- ஆம் தேதி தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.