ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினாா்.
இக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ விழா செப். 14- ஆம் தேதி தொடங்கியது. விழாவில் பூச்சாண்டி சேவை செப்.15 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடா்ந்து தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் 7-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மாலை 6.45 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு இரவு 7 மணிக்கு திருக்கொட்டாரம் முன்பு உள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
அப்போது, நம்பெருமாளின் எதிரே கொட்டப்பட்ட நெல்மணிகளை கொப்பரையில் அளந்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தாா் விழாவின் நிறைவு நாளான செப். 22- ஆம் தேதி தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் கோடைத்திருநாள் விழா நிறைவு

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


