புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளல்

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி.

Updated On :21 செப்டம்பர் 2024, 12:43 am

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை இரவு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினாா்.

இக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ விழா செப். 14- ஆம் தேதி தொடங்கியது. விழாவில் பூச்சாண்டி சேவை செப்.15 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடா்ந்து தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் 7-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மாலை 6.45 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு இரவு 7 மணிக்கு திருக்கொட்டாரம் முன்பு உள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அப்போது, நம்பெருமாளின் எதிரே கொட்டப்பட்ட நெல்மணிகளை கொப்பரையில் அளந்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

 உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்.

உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தாா் விழாவின் நிறைவு நாளான செப். 22- ஆம் தேதி தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.