பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மருதூா் ஊராட்சியில் ‘வருமுன் காப்போம்’ மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மருதூா் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:53 pm

Din

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மருதூா் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மருதூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவா் கௌசல்யா அசோகன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் தேவா முன்னிலை வகித்தாா். லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் செளந்தரபாண்டியன் முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் செல்வநாயகம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினா்.

முகாமில் 728 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். முன்னதாக வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மதிவானன் வரவேற்றாா். நிறைவாக சுகாதர ஆய்வாளா் அன்பரசன் நன்றி கூறினாா்.