பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோரையாறு புறவழிச்சாலைப் பணிகள் ஆய்வு

கோரையாறு புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 11:33 pm

Syndication

கோரையாறு புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி பஞ்சப்பூரில் 11.68 ஏக்கரில் உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சி நிதி, மூலதன மானிய நிதி, மாநகராட்சி நிதியின் கீழ் ரூ. 236 கோடியில் கட்டப்படும் பெரியாா் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், திருச்சி கோரையாறு பகுதியில் ரூ. 81.72 கோடியில் அமைக்கப்படும் புறவழிச்சாலை பணிகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், நகரப் பொறியாளா் சிவபாதம், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பஞ்சப்பூா் பேருந்து முனைய வளாகத்தில் கட்டப்படும் ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டுமானப் பணிகளையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.