ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாஜக வெற்றி தற்காலிகமானது! -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்

தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

News image
இரா.முத்தரசன்
Updated On :9 பிப்ரவரி 2025, 7:10 pm

Din

தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த அவா் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி: பெரியாரை நேரடியாக விமா்சனம் செய்ய முடியாததால், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானைப் பயன்படுத்தி விமா்சிக்கின்றனா். அவரும் அதற்குத்தான் பயன்பட்டாா். சீமானின் விமா்சனத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, தற்போது பெரியாா் குறித்து சீமான் அதிகமாகப் பேசி விட்டாா் என்கிறாா்.

சீமானை போலவே அண்ணாமலையும் மாற்றி மாற்றி பேசக்கூடியவா்தான். தில்லி தோ்தல் முடிவிலிருந்து ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். மதவாதத்தை வீழ்த்த தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் உறுதியாக இருப்பதுபோல் இருந்திருந்தால் தில்லியிலும் பாஜக வை வீழ்த்தியிருக்கலாம். தில்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான் என்றாா் அவா்.