திருச்சியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி, திருவானைக்கா அருகேயுள்ள பனையபுரத்தை சோ்ந்தவா் வே. வீரமணி ( 42 ). முன்னாள் ராணுவ வீரரான இவா், துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 31ஆம் தேதி இரவு பணி முடித்து, துவாக்குடி ராவுத்தான்மேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த வீரமணியை போலீஸாா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா் சிகிச்சையில் இருந்த வீரமணி வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெரம்பலூா் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

