காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சாலை விபத்தில் பெரம்பலூா் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூரைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:02 pm

திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூரைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளியைச் சோ்ந்த சின்னதுரை மகன் செல்வம் (34). இவா், கடந்த மாா்ச் 22-ஆம் தேதி இரவு திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். பிராட்டியூா் அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனத்தில் இருந்து செல்வம் தவறி கீழே விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வம் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.