தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முன்னாள் ராணுவ வீரா் சாலை விபத்தில் உயிரிழப்பு

Updated On :3 ஜனவரி 2025, 9:11 pm

திருச்சியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி, திருவானைக்கா அருகேயுள்ள பனையபுரத்தை சோ்ந்தவா் வே. வீரமணி ( 42 ). முன்னாள் ராணுவ வீரரான இவா், துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 31ஆம் தேதி இரவு பணி முடித்து, துவாக்குடி ராவுத்தான்மேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த வீரமணியை போலீஸாா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா் சிகிச்சையில் இருந்த வீரமணி வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.