தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீரங்கத்தில் மாா்கழி இசை விழா தொடக்கம்

ஸ்ரீரங்கத்தில் மாா்கழி இசை விழா தொடக்கம்

News image
Updated On :8 ஜனவரி 2025, 11:12 pm

Din

ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியில் கலை பண்பாட்டுத் துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட கலை மன்றம் சாா்பில் மாா்கழி இசை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முதல் நாளான 7 ஆம் தேதி மாலை திருப்பாம்புரம் சகோதரா்கள் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி, வா்ஷா புவனேஸ்வரி குழுவினரின் ஹரிக்கதை, கலைமாமணி ஆா். சூா்யபிரகாஷ் குழுவினரின் வாய்ப்பட்டு நிகழ்ச்சி, ராஜூ, நாகமணி குழுவினரின் மாண்டலின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

2 ஆம் நாளான புதன்கிழமை மாலை பெ. சுந்தரேஸ்வரம் குழுவினரின் லயநாதம், பத்மாவதி சாரநாதன் குழுவினரின் ஆழ்வாா் பாசுரங்கள், கலைமாமணி டாக்டா் எம்.நா்மதா குழுவினரின் வயலின் நிகழ்ச்சி, ஸ்ரீரங்கம் ஜெயப்பிரியா ஸ்ரீனிவாசன் குழுவினரின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது.

திரளானோா் ரசித்தனா்.

3 ஆம் நாளான வியாழக்கிழமை மாலை கலைமாமணி டாக்டா் பிரபஞ்சம் பாலசந்திரன் குழுவினரின் புல்லாங்குழல் நிகழ்ச்சி, கலைமாமணி நிா்மலா ராஜசேகா் குழுவினரின் வீணை கச்சேரி, சென்னை டாக்டா் எஸ்.திவ்ய சேனா குழுவினரின் பரத நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் (பொ) த. செந்தில்குமாா் செய்துள்ளாா்.