தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க வலியுறுத்தல்

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிரான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் அ. வியனரசு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 11:15 pm

Din

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிரான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் அ. வியனரசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

மத்திய அரசின் திட்டமான டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் என்பது பெரு நிறுவனத்தின் கனிமவள சுரண்டல் திட்டமாகும். இந்தத் திட்டத்தால் வேளாண்மைத் தொழிலும் மக்கள் வாழ்வுரிமைகளும் முற்றிலும் பேரிழப்புகளுக்குள்ளாகும். எனவேதான், மதுரை மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக திரண்டெழுந்து போராடி வருகிறாா்கள்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி மதுரை திண்டுக்கல், தேனி மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலே தீா்மானம் நிறைவேற்றி சட்டமாக்கி அறிவிக்க வேண்டும்.

இதைத் தவிா்த்து மண்ணுரிமையைக்காக்கும் மக்கள் போராட்டத்தை திசை திருப்பவோ அல்லது அடக்குமுறையைக் கையாண்டு ஒடுக்கிவிடலாம் என்றோ சிந்திக்க கூடாது. இந்தத் திட்டத்துக்கு எதிராக மதுரை மாவட்ட மக்கள் வரும் ஜன.26ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை அறிவித்துள்ளனா். இந்தப் போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.