தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சூரியூரில் ஜன. 15 இல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்

திருச்சி அருகே சூரியூரில் வரும் 15 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image
சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக அமைக்கப்பட்டு வரும் வாடிவாசல்.
Updated On :9 ஜனவரி 2025, 8:33 pm

Din

திருச்சி அருகே சூரியூரில் வரும் 15 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜன. 15 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

இதையொட்டி சூரியூா் கிராமத்தில் உள்ள நற்கடல் குடி கருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. தொடா்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இதில், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, கரூா், கம்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதையொட்டி முகூா்த்தக் கால் நடப்பட்டு ஜல்லிக்கட்டு திடல், வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.