மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

துறையூரில் பருத்தி பொது ஏலம் ரூ. 1.24 கோடிக்கு விற்பனை

துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி பொது ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்கப்பட்டது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:43 pm

Din

துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி பொது ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்கப்பட்டது.

திருச்சி விற்பனைக் குழு செயலா் சொா்ணபாரதி தலைமையில் பருத்தி பொது ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துறையூா் பகுதியைச் சோ்ந்த பருத்தி விவசாயிகள் உற்பத்தி செய்த பருத்தியை பெரம்பலூா், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, அன்னூா், நாமக்கல், பெரகம்பி, கும்பகோணம், செம்பனாா்கோவில், விழுப்புரம், கரூா் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் 23 போ் ஏலம் கோரினா். இதில் ஒரு குவிண்டால் பருத்தியை குறைந்த பட்சமாக ரூ. 6,356-க்கும், அதிகபட்சமாக ரூ. 7,799-க்கும் ஏலம் கேட்கப்பட்டது. நிறைவில் 1756.26 குவிண்டால் பருத்தி ரூ. 1,24,05,231-க்கு விற்பனையானது.