தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலை தடுப்பில் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 5:46 pm

Din

திருச்சி: திருச்சியில் சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி துரைசாமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் (27). தச்சா். இவா் கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். பஞ்சப்பூா் ரவுண்டானா பகுதியில் சென்றபோது அவரது வாகனம் கட்டுப் பாட்டை இழந்து அங்குள்ள சாலை தடுப்பு கம்பியில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை முடிந்து சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினாா்.

மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜோசப்புக்கு மனைவி மற்றும் மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளனா். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.