எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திருச்சி விமான நிலையத்தில் 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7.82 லட்சம் மதிப்பிலான 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்த வெளிநாட்டு சிகரெட்டுகள்

Updated On :28 ஜனவரி 2025, 2:29 am IST

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7.82 லட்சம் மதிப்பிலான 51,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில், ஒரு பயணி உரிய அனுமதியின்றி, வெளிநாட்டில் தயாரான சிகெரெட்டுகளை கொண்டு வந்திருந்தது தெரியவந்தது. அதில் 250 பெட்டிகளில் தலா 10 மற்றும் 20 சிகரெட்டுகள் வீதம் 50,000 இஎஸ்எஸ்இ கோல்டு என்ற ரக சிகரெட்டுகளும், ஒயிட் ஸ்லிம்ஸ் ரக சிகரெட்டுகள் 1600 என மொத்தம் 51,600 சிகரெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.7.82 லட்சமாகும்.

அவற்றை கைப்பற்றிய சுங்கத் துறையினா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.