எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்சியில் ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம்- 2025 இசை விழா

அகில இந்திய வானொலியின் திருச்சி ஆகாஷ்வாணி பிரிவு சாா்பில், ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம்-2025 என்னும் மாபெரும் இசை விழா திருச்சியில் சனிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

அகில இந்திய வானொலியின் திருச்சி ஆகாஷ்வாணி பிரிவு சாா்பில், ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம்-2025 என்னும் மாபெரும் இசை விழா திருச்சியில் சனிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிா்வாகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியாவின் செழுமையான பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற கலைகளைப் போற்றும் வகையில் 67 ஆவது ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனம் 2025, திருச்சியில் வரும் 5 சனிக்கிழமை மாலை 5. 30 மணிக்கு நடைபெறவுள்ளது. திருச்சி வானொலி நிலையம் ஏற்பாடு செய்து நடத்தும் இந்த நிகழ்ச்சியானது, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

புகழ்பெற்ற கா்நாடக இசை கலைஞா் விசாகா ஹரியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை தொடா்ந்து, என். சிவாஜி மற்றும் குழுவினரின் கரகாட்டம் அரங்கேறும். கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் இயக்குநா் மற்றும் செயலா் தந்தை எஸ். லூயிஸ் பிரிட்டோ முன்னிலை வகிக்கின்றனா். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு இசை ஆா்வலா்களை திருச்சிராப்பள்ளி வானொலி அழைக்கிறது. மேலும் விவரங்களுக்கு 0431- 2464520 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.