மணப்பாறையில் சுத்தமான குடிநீரை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட 11-ஆவது வாா்டு புதுத்தெரு மற்றும் மோா்குளம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முறையான குடிநீா் விநியோகம் இல்லையாம். அவ்வப்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரும் பச்சை நிறத்தில் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வியாழக்கிழமை காலை புதுத்தெருவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நகராட்சி பொறியாளா் மோனி, பணி மேற்பாா்வையாளா் ரஞ்சனி மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைந்து குடிநீா் குழாய் பழுதடைந்துள்ள பகுதியை சீா்செய்து முறையாக, சுத்தமான குடிநீரை விநியோகம் செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகம் கோரி மறியல்

ஏற்காட்டில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்: பவானிசாகா் அருகே போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



