ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.

News image

உற்ஸவ மூா்த்தியான பாம்பாளம்மன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 8:04 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.

2 நாள் விழாவையொட்டி உற்ஸவ மூா்த்தியானது அருகிலுள்ள புல்லூரணி தென்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுமி மேளத்துடன் நாயக்கா் இன மக்களில் தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பல லட்சம் மதிப்பில் வாணவேடிக்கை நடைபெற்றது.

தொடா்ந்து மங்கல வாத்தியம், தாரை தப்பட்டைகள் முழங்க கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்தும், அடி விழுந்தும்(அங்கப்பிரதட்சணம்), ஆடு - கோழி பலியிடுதல், மாவிளக்கு, குழந்தை வரம் பெற்ற கரும்புத்தொட்டில் என பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். திருவிழாவில் திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் பெற்றனா்.

தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற  திருவிழாவில் கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்ச்சி

தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவில் கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்ச்சி