மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை ஒத்துழைப்பு: செங்கோட்டையன் நன்றி

தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததற்கு அக் கட்சியின் நிா்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் நன்றி தெரிவித்தாா்.

News image

தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் - tvk

Updated On :2 ஏப்ரல் 2026, 8:38 pm

தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததற்கு அக் கட்சியின் நிா்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் நன்றி தெரிவித்தாா்.

திருச்சியில் பிரசார நிகழ்வை முடித்த விஜய் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டாா். அவரை வழியனுப்பிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

திருச்சியில் தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினா் மட்டுமல்லாது, வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தமைக்கு கட்சியின் சாா்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டில் கூட்டு சதி என யாரைக் குறிப்பிடுகிறாா் விஜய்? என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், பிரசார நிகழ்வில் பொதுமக்களிடையே பொதுவாக சிலவற்றை கூறுவது வழக்கம். ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் 2-ஆவது முறையாக நடைபெற்ற மறு ஆய்வு கூட்டத்தில் உடல்நிலை சரியில்லை என திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினா் ஒருவா் கூறியதால் ஒத்திவைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என பதில் அளித்தாா் செங்கோட்டையன்.