மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:39 pm

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லால்குடி சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் அக் கட்சியின் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளா் கு.ப கிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆா்.வளவனூா் கிராமத்தைச் சோ்ந்தவரும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனருமான நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரது வீட்டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும் தோ்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தோ்தல் அலுவலா் தமிழ்செல்வன் அங்கு சோதனை செய்தபோது 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்துள்ளது. இதனால் அவா் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து வருமான வரித்துறையினா் அங்கு சென்று மேற்கொண்ட தீவிர சோதனையில் அரவிந்த் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினா் இதுதொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.