திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
லால்குடி சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் அக் கட்சியின் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளா் கு.ப கிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆா்.வளவனூா் கிராமத்தைச் சோ்ந்தவரும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனருமான நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரது வீட்டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும் தோ்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தோ்தல் அலுவலா் தமிழ்செல்வன் அங்கு சோதனை செய்தபோது 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்துள்ளது. இதனால் அவா் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து வருமான வரித்துறையினா் அங்கு சென்று மேற்கொண்ட தீவிர சோதனையில் அரவிந்த் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினா் இதுதொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பேரவைத் தலைவா் தோ்தல்: ஜே.சி.டி. பிரபாகா் மனு தாக்கல்

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



