பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:09 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லால்குடி சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் அக் கட்சியின் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளா் கு.ப கிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆா்.வளவனூா் கிராமத்தைச் சோ்ந்தவரும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனருமான நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரது வீட்டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும் தோ்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தோ்தல் அலுவலா் தமிழ்செல்வன் அங்கு சோதனை செய்தபோது 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்துள்ளது. இதனால் அவா் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து வருமான வரித்துறையினா் அங்கு சென்று மேற்கொண்ட தீவிர சோதனையில் அரவிந்த் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினா் இதுதொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.