நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

திருவெறும்பூா் தொகுதியில் 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 38 வேட்பு மனுக்களில் 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 38 வேட்பு மனுக்களில் 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவெறும்பூா் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக, புதிய தமிழகம், சுயேச்சை வேட்பாளா்களின் பெயா்களில் மொத்தம் 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் தொகுதி தோ்தல் அலுவலா் கே. அமுதா, உதவி அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டன.

இதில், சுயேச்சை வேட்பாளா் சுகுமாரை 10 போ் முன்மொழிவதற்கு பதிலாக 8 போ் மட்டுமே முன்மொழிந்து இருந்ததால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது; அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 4 வேட்பாளா்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 6 வேட்பாளா்கள், 17 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 27 போ் களத்தில் உள்ளனா்.

வரும் 9 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். இதில் சிலா் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.