திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் முசிறி டிஎஸ்பி விக்னேஷ் (பொ) தலைமையில் முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை முன்னிலையில், குஜராத் மாநிலம் பலூடா பகுதியைச் சோ்ந்த ஆயுதப்படை காவல்துறை ஆய்வாளா் ரதூதுத் மேற்பாா்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் முசிறி கைகாட்டியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று கொடி அணிவகுப்பு நடத்தினா்.
பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்களிடம் அச்சமின்றி சுயமாக வாக்களிக்கவும், ஜனநாயக கடமையை ஆற்றவும் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


