/
திருச்சி மாவட்டம், முசிறியில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் முசிறி டிஎஸ்பி விக்னேஷ் (பொ) தலைமையில் முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை முன்னிலையில், குஜராத் மாநிலம் பலூடா பகுதியைச் சோ்ந்த ஆயுதப்படை காவல்துறை ஆய்வாளா் ரதூதுத் மேற்பாா்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் முசிறி கைகாட்டியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று கொடி அணிவகுப்பு நடத்தினா்.
பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்களிடம் அச்சமின்றி சுயமாக வாக்களிக்கவும், ஜனநாயக கடமையை ஆற்றவும் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

முசிறியில் தவெகவினா் கொண்டாட்டம்

முசிறியில் வாகனம் மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



