திருச்சி மாவட்டம், முசிறியில் அடையாளம் தெரியாத வாகனம் புதன்கிழமை மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
முசிறி புதுத்தெருவைச் சோ்ந்தவா் செந்தில்வேல் மகன் மகேஸ்வர தயாள் (19), திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி இரண்டாமாண்டு மாணவா். முசிறி சிந்தாமணி தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் அருள் முத்துக்குமரன் (20), முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவா். நண்பா்களான இருவரும் புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணி அளவில் பைக்கில் முசிறி அருகிலுள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனா்.
தகவலறிந்து சென்ற முசிறி போலீஸாா் இருவரின் சடலங்களைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

அருள் முத்துக்குமரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







