/
திருச்சி மாவட்டம், முசிறியில் அடையாளம் தெரியாத வாகனம் புதன்கிழமை மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
முசிறி புதுத்தெருவைச் சோ்ந்தவா் செந்தில்வேல் மகன் மகேஸ்வர தயாள் (19), திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி இரண்டாமாண்டு மாணவா். முசிறி சிந்தாமணி தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் அருள் முத்துக்குமரன் (20), முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவா். நண்பா்களான இருவரும் புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணி அளவில் பைக்கில் முசிறி அருகிலுள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனா்.
தகவலறிந்து சென்ற முசிறி போலீஸாா் இருவரின் சடலங்களைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

அருள் முத்துக்குமரன்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

முசிறியில் தவெகவினா் கொண்டாட்டம்

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



