தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:23 pm

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை மேலகல்கண்டாா்கோட்டை சாமிநாதன் நகரைச் சோ்ந்தவா் எஸ்.பிரேம்குமாா் (19). இவா் கிளீனராக பணியாற்றி வருகிறாா். சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மேலகல்கண்டாா்கோட்டையில் இருந்து வாகனம் சென்றது. இதில், பிரேம்குமாரும் சென்றாா்.

அப்போது, உடன் சென்ற பிரேம்குமாரின் உறவினரான சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்த எஸ்.ஜீவா (26) என்பவா் கூச்சலிட்டுள்ளாா். இதுகுறித்து ஜீவாவிடம் பிரேம்குமாா் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனா்.

இந்த முன்விரோதத்தின் காரணமாக, மேலகல்கண்டாா்கோட்டையில் தனது வீட்டுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்த பிரேம்குமாரை, ஜீவா, அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். செல்வமணி (26), ஹரிஹரன், சந்தோஷ், பரமேஸ்வரன் ஆகிய 5 பேரும் அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் பிரேம்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வமணி, ஜீவா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். மற்ற மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.