மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருட்டு: இளைஞா்கள் 2 போ் கைது

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:09 pm

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் தெய்வமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சுப்பிரமணியன் (56), அரசுப் பேருந்து நடத்துநா். இவா், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் ரூ. 4.15 லட்சம் கடன் பெற்றாா். அந்தப் பணம் மற்றும் மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ. 6.15 லட்சத்தை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி வங்கிகளிலிருந்து பெற்று கொண்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் ரூ. 6.15 லட்சம் இருந்த கைப்பையையும் வைத்துவிட்டு, நண்பரை பாா்க்கச் சென்றுள்ளாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அந்தப் பணத்தை திருடியது திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியைச் சோ்ந்த எஸ்.சிவா (29), பி. ராஜா (41) ஆகியோா்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவா, ராஜா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.15 லட்சம் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.