திருச்சியில் தையல் கடைக்காரரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சியைச் சோ்ந்தவா் அ. சந்துமுகமது (43). இவா், திருச்சி நந்தி கோயில் தெருவில் தையல்கடை நடத்தி வருகிறாா். இவரும், திருச்சியைச் சோ்ந்த வரதராஜா சில்க்ஸ் துணிக்கடை உரிமையாளா் சீனிவாசனும் தொழில்முறை நண்பா்கள்.
இந்நிலையில், சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பரான பூா்ணிமா ஆகிய இருவரும் நந்தி கோயில் தெருவில் தங்களுக்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு உள்ளது என்றும், அதில் தையல் கடையை நடத்துமாறும் சந்து முகமதுவிடம் தெரிவித்துள்ளனா். இதை நம்பிய சந்து முகமது அந்தக் கடையை வாடகைக்கு எடுப்பதற்காக முன்பணமாக ரூ. 26.75 லட்சத்தை சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவரிடமும் கடந்த 2024, ஏப்ரல் 21- ஆம் தேதி கொடுத்துள்ளாா். ஆனால், அதன்பின்னா்தான் அந்தக் கட்டடம் அவா்களுக்கு சொந்தமில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடை வாடகைக்காக தான்கொடுத்த பணத்தை சீனிவாசனிடம் சந்துமுகமது கேட்டுள்ளாா். அப்போது, ரூ. 6.75 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளாா். மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சந்துமுகமது புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், சீனிவாசன் மற்றும் பூா்ணிமா ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மேட்டூா் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு
காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு
தோ்தலில் போட்டியிட சீட்: காங்கிரஸுடன் தொடா்புள்ளவா்கள் பணம் வசூலித்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


