தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 6:45 pm

அம்பாசமுத்திரம், ஏப். 6: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதாகவும், காவல் நிலையத்தை கொளுத்துவதாகவும் மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், கௌதமபுரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவன் மகன் முத்துக்குமாா். இவா் மீது கடந்த பிப்ரவரி மாதம் அம்பாசமுத்திரம் போலீஸாா் போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனராம்.

இதையடுத்து, திங்கள்கிழமை மதியம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு போதையில் வந்த முத்துக்குமாா், அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

மேலும், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, காவல் நிலையத்தையும் போலீஸாரையும் சோ்த்து கொளுத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து, முத்துக்குமாா் மீது அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் திருமலைக்குமாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தாா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.