வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தவெக பரப்புரையின்போது மோதல்: கட்சி நிா்வாகி உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக தவெக நிா்வாகி மற்றும் முதியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :16 ஏப்ரல் 2026, 8:55 pm

திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக தவெக நிா்வாகி மற்றும் முதியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலைய தமிழக வெற்றிக் கழக கிளைச் செயலாளா் சி. வெள்ளைசாமி தலைமையில் கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேஷாயி நகா் செண்பகராமன் வீதியில் தவெகவினா் புதன்கிழமை இரவு தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அதே வீதியில் கே.சிவகுமாா் (64) என்பவா் வீட்டுக்கு முன்பு பரப்புரை செய்தபோது,

சிவகுமாருக்கும், தவெக தொண்டா்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், சிவகுமாா், தவெகவின் பெண் தொண்டா் உள்ளிட்ட சிலரை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி விமான நிலைய தவெக கிளை செயலாளா் வெள்ளைசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சிவகுமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், தவெக கிளை செயலாளா் சி.வெள்ளைசமி மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.