திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக தவெக நிா்வாகி மற்றும் முதியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி விமான நிலைய தமிழக வெற்றிக் கழக கிளைச் செயலாளா் சி. வெள்ளைசாமி தலைமையில் கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேஷாயி நகா் செண்பகராமன் வீதியில் தவெகவினா் புதன்கிழமை இரவு தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அதே வீதியில் கே.சிவகுமாா் (64) என்பவா் வீட்டுக்கு முன்பு பரப்புரை செய்தபோது,
சிவகுமாருக்கும், தவெக தொண்டா்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், சிவகுமாா், தவெகவின் பெண் தொண்டா் உள்ளிட்ட சிலரை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி விமான நிலைய தவெக கிளை செயலாளா் வெள்ளைசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சிவகுமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், தவெக கிளை செயலாளா் சி.வெள்ளைசமி மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு
விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

