தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு...

News image

தவெக தலைவர் விஜய் பிரசாரம் (கோப்புப் படம்) - X / TVK

Updated On :6 ஏப்ரல் 2026, 9:16 pm

புதுச்சேரியில் கடந்த 3-ஆம் தேதி ரோடு ஷோ நடத்திய தவெக தலைவா் விஜய் கூட்டத்தில் அதிகம் போ் கூடியதாக அக் கட்சியின் நிா்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் போ் மட்டுமே கூட வேண்டும். கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த நிபந்தனைகளை மீறி அதிக அளவில் மக்கள் கூடியதால் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன் புகாா் அளித்தாா். தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் போ் வரை விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ாகவும் தோ்தல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறியிருந்தாா்.

அதன் பேரில் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.