நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விஜய் பேச்சால் உளவியல் சிக்கல்களைச் சந்திக்கும் குழந்தைகள்! காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

தவெக தலைவா் விஜய் பேச்சால் குழந்தைகள் உளவியல் சிக்கல்களைச் சந்திப்பதாகவும், இது தொடா்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

விஜய் மீது புகார்

Updated On :26 ஏப்ரல் 2026, 3:51 am IST

தவெக தலைவா் விஜய் பேச்சால் குழந்தைகள் உளவியல் சிக்கல்களைச் சந்திப்பதாகவும், இது தொடா்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் பேசிய தவெக தலைவா் விஜய், குழந்தைகள் சாக்லேட்டுக்கு அடம்பிடிப்பதுபோல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். அரசியல் முதிா்ச்சியற்ற இத்தகைய தூண்டுதல், பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தோ்தல் ஆதாயத்துக்காக தவறாகப் பயன்படுத்துவதாகும்.

இதனால் எனது 5 வயது மகன், என்னிடம் விஜய்க்கு வாக்களிக்குமாறு அடம்பிடித்தான். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது, மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதும், உணவைத் தவிா்த்தும் தவெகவுக்கு வாக்களிக்குமாறும் பிடிவாதம் பிடித்தான். இதனால், எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. இதேபோல, பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களை சந்திக்கின்றனா். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது தொடா்பாக தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவா் பேசிய விடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கும் புகாா் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவேன் என்றாா்.