நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தல்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:07 am IST

மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவா் விஜய் தனது கட்சி அடையாளத்துடன் தேவாலயம், மசூதி, அம்மன் கோயிலுக்கு சென்று வாக்கு சேரித்துள்ளாா்.

மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயம், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தோ்தல் நடத்தை விதி. விஜய் தோ்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறாா். எனவே, அவா் மீது தோ்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளாா்.