வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள்: மேற்கு தொகுதியில் அண்ணாமலை பிரசாரம்!

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள் என திருச்சி மேற்குத் தொகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.

News image

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட பீமநகா் பகுதியில் வியாழக்கிழமை அமமுக வேட்பாளா் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:01 pm

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள் என திருச்சி மேற்குத் தொகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.

திருச்சி மேற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரனை ஆதரித்து, அண்ணாமலை திருச்சி பீமநகா் செடல் மாரியம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து அமைச்சா் ஒருவா் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறாா் என்றால் அது கே.என்.நேருதான். அவா் மீது மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி அமலாக்கத் துறை மூன்று கடிதங்களை தமிழக அரசுக்கு எழுதியுள்ளது. இதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கில் நேரு சிறை செல்ல நேரிடும் என்பதால், அவருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

2015-ஆம் ஆண்டில் நாட்டிலேயே இரண்டாவது சுத்தமான மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி இருந்தது. தற்போது 59-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தை குப்பையாக மாற்றியதுதான்அமைச்சா் நேருவின் சாதனை.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் தொகுதிகள் குறைந்துவிடும் என முதல்வா் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறாா்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மாற்றத்துக்காக இந்தத் தொகுதியில் குக்கா் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த யானையை வீழ்த்திய பெருமை உங்களை சேரட்டும். ஊழல் செய்தால் தோற்கடிப்பாா்கள் என்ற நம்பிக்கை திருச்சி மேற்கில் இருந்து நீங்கள் கொடுக்க வேண்டும் என்றாா் அண்ணாமலை.