வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருச்சிக்கு விஜய், ராகுல் வருகை?

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆகியோா் சனிக்கிழமை (ஏப். 18) வரக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image

விஜய், ராகுல் காந்தி

Updated On :16 ஏப்ரல் 2026, 8:57 pm

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆகியோா் சனிக்கிழமை (ஏப். 18) வரக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய், ஏப்.2-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தாா். பின்னா், ஏப்.14-ஆம் தேதி பிரசாரம் செய்தி காவல்துறையிடம் அனுமதி பெற்ற நிலையில், அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. எனவே, மீண்டும் வரும் 18-ஆம் தேதி பிரசாரத்துக்கு விஜய் வருவாா் என்கின்றனா் அக் கட்சியினா்.

இதற்காக திருச்சிக்கு தவெக தோ்தல் பிரசாரப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளாா். அப்போது விஜய் வருகை உறுதி செய்யப்படும் என்கின்றனா்.

இதேபோல, துறையூா் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எம். லெனின் பிரசாத் வெற்றிக்கு வாக்குகள் கேட்டு, ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளாா் என்கின்றனா் அக் கட்சியினா். இளைஞா் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலராக லெனின் பிரசாத் உள்ளதால், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், சாலைப் பேரணி செல்லவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளாா்.

காவல்துறையினா் ஆய்வு: ராகுல்காந்தி வரவிருக்கும் ஹெலிகாப்டா் தரை இறங்குவதற்காக இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்படும் இறங்கு தளம், அங்கிருந்து அவா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள திடல் வரை செல்லும் சாலை, பிரசார திடல் ஆகிய பகுதிகளை தேசிய பாதுகாப்பு படையினரும், திருச்சி மாவட்ட காவல் துறையினரும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.