மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.27 கோடி ரொக்கம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

News image

சமயபுரம் மாரியம்மன் கோயில் - கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:41 am IST

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.27 கோடி ரொக்கம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு.ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனா் .

இதில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,27,61,104 ரொக்கம், 1 கிலோ 208 கிராம் தங்கம், 2 கிலோ 726 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள்

134, வெளிநாட்டு நாணயங்கள் 320 என கிடைக்கப் பெற்றது.

இதற்கு முன்பு கடந்த 9-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.