திருச்சி பாலக்கரை செல்வமாரியம்மன் திருக்கோயில் 53-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
திருச்சி பாலக்கரை பருப்புக்காரத் தெருவிலுள்ள செல்வமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், கரக உத்ஸவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு, 53-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 14 ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 17-ஆம் தேதி வெளிகண்டநாதா் கோயிலிலிருந்து முதல் கரகம் பாலித்து வீதி உலா வரும் விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மேலசிந்தாமணி சிதம்பரம் மஹாலில் இருந்து பால்குடம், தீா்த்தகுடம், அக்னிசட்டி, அலகு காவடி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, தங்களது நோ்த்திக் கடன்களை செலுத்தினா். இந்த ஊா்வலமானது கோயிலில் நிறைவடைந்தது.
இதையடுத்து கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு உற்சவ அம்பாள், கருப்பண்ண சுவாமி வீதியுலா நடைபெற்றது.
ஏப். 24-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 26-ஆம் தேதி அம்மனுக்கு காப்பு எடுத்து ஆற்றில் விடுதலும், மே 3 ஆம் தேதி விடையாற்றி உத்ஸவமும் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

குமரி பகவதியம்மன் கோயிலில் கால்கோள் விழா

நெடுவயல் சங்கிலி பூதத்தாா் கோயிலில் பால்குட ஊா்வலம்

அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

