அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

திருச்சியில் மூதாட்டியின் வீட்டினுள் புகுந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :22 ஏப்ரல் 2026, 1:03 am IST

திருச்சியில் மூதாட்டியின் வீட்டினுள் புகுந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையம் குழவாய்பட்டி சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் ஆா். சுமதி (72). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவா் உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னையிலுள்ள தனது மகளுடன் வசித்து வருகிறாா். அவ்வப்போது திருச்சியிலுள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த மூதாட்டி காவேரி நகரிலுள்ள வீட்டில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் மூதாட்டி சுமதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.