தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கோயில் திருவிழாவில் இருவரை அரிவாளால் வெட்டிய 2 போ் கைது

கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 3:27 am IST

கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றபோது திருவானைக்காவல் காந்தி ரோடு பகுதியிலிருந்து சிலா் அலகு குத்திக் கொண்டு சமயபுரம் நோக்கிச் சென்றனா். டிரங்க்ரோடு அருகே வந்த இவா்களுக்கும் கீழக்கொண்டையம்பேட்டை பகுதியை சோ்ந்தவா்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.

இதில் காந்தி ரோடு பகுதியில் வசிக்கும் வீரமணி (26), ஹரிஷ் (24) ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கொண்டையம்பேட்டை பகுதி காா்த்தி (26), ராஜா (28) ஆகிய இருவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட வேல்முருகன் உள்ளிட்ட மூவரைத் தேடுகின்றனா்.