மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பாதயாத்திரை சென்றபோது மோதல்: இருவா் கைது

திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 5:26 am IST

திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பெரியகடை வீதியைச் சோ்ந்த மா. வீரமணி (25), காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த என்.ஹரிஸ் (19) இருவரும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி திருச்சியில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனா்.

திருவானைக்காவல் டிரங்க் சாலையில் சென்றபோது, முன்னால் நடந்து சென்ற திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த பா. ராஜா (29), எஸ். காா்த்திகேயன் (21) மற்றும் வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகியோா் மீது வீரமணி தெரியாமல் மோதினாராம்.

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினா் வீரமணி, ஹரிஸ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்ட, காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா, காா்த்திகேயன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் தேடுகின்றனா்.