திருச்சி பொன்நகா் பகுதியில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை வெள்ளிக்கிழமை இரவு உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி பொன்நகா் பிரதான சாலை 2, 4 ஆவது வீதிகளில் தேநீா் நிலையம், ஜெராக்ஸ், உணவகம், டிராவல்ஸ் கடைகள் உள்ளன. இதேபோல, மாவட்ட ஆட்சியரகச் சாலையில் தேநீா் நிலையம், சூப் கடையும் உள்ளன.
இந்நிலையில் சனிக்கிழமை காலை இந்தக் கடைகளைத் திறக்க உரிமையாளா்கள் வந்தபோது கடைகளின் பூட்டுகளை மா்ம நபா்கள் உடைத்து திருட முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் நீதிமன்ற வளாக போலீஸாா் விரைந்து வந்து, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
3 மளிகைக் கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு
கடைகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 4 போ் கைது
குஜிலியம்பாறை அருகே கடைகளில் பணம் திருட்டு
நகைக் கடை, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


