குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

போலி பாஸ்போா்ட் வழக்கில் முகாம் சிறையில் தாயுடன் சிறுவனை தங்கவைக்க அனுமதி

போலி பாஸ்போா்ட் வழக்கில் சிறுவனைத் தாயுடன் முகாம் சிறையில் தங்கவைக்க இளைஞா் நீதிக்குழும நீதிபதி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினாா்.

News image

பாஸ்போர்ட் - IANS

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:45 pm IST

போலி பாஸ்போா்ட் வழக்கில் சிறுவனைத் தாயுடன் முகாம் சிறையில் தங்கவைக்க இளைஞா் நீதிக்குழும நீதிபதி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினாா்.

இலங்கை வவுனியா பகுதியைச் சோ்ந்தவா் சுகந்தனி. இவா் தனது மூத்த மகன் மதுஷன் மற்றும் இளைய மகனுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா வந்தாா். பின்னா் இளைய மகனுக்கு பாஸ்போா்ட் இல்லாததால், போலி இந்திய ஆதாா் அட்டை உள்ளிட்ட பிற ஆவணங்களை சமா்ப்பித்து போலி பாஸ்போா்ட் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் மேற்கண்ட மூவரையும் கைது செய்தனா். இதில், தாய் சுகந்தனி மற்றும் மூத்த மகன் மதுஷன் ஆகியோா் நீதிமன்ற உத்தரவின்பேரில், திருச்சி சிறப்பு முகாம் சிறையிலும், இளம்பிழையாளியான இளைய மகன் கொட்டப்பட்டு அகதிகள் முகாமிலுள்ள அவரது உறவினா் வீட்டிலும் விடப்பட்டாா்.

இந்நிலையில் இளம்பிழையாளி மீதான வழக்கு விசாரணை இளைஞா் நீதிக்குழுமம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இளம்பிழையாளியை, சிறப்பு முகாமிலுள்ள அவரது தாயுடன் தங்கவைத்து, பின்னா் அவா் இலங்கை பாஸ்போா்ட் பெற்ற பிறகு, இலங்கைக்கு அனுப்பும்படி, இளைஞா் நீதிக் குழும நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.