தமிழ்நாட்டை மது மற்றும் போதைப்பொருள்கள் இல்லாத ஆரோக்கியமான மாநிலமாக மாற்றும் நோக்கில், மது மற்றும் போதைக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சாா்பில் மாநில அளவிலான விழிப்புணா்வு பரப்புரை ஆக.15-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து பரப்புரை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் முகது ரியாஸ் திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞா்களிடையே போதைப்பொருள் பழக்கம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. அவா்களிடையே போதைப்பொருள்களின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு, அவா்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு நல்வழிப்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம், ஆளுமைகள் சந்திப்பு, நோ்காணல், கண்காட்சி, அரங்க கூட்டம், மாபெரும் மனித சங்கிலி என பல்வேறு நிகழ்வுகள் இந்த பரப்புரையில் நடைபெறவுள்ளன.
மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சி துறை மாநில பொதுச் செயலா் பாபு பெஞ்சமின் இளங்கோ, பரப்புரைக்கான இலச்சினையை வெளியிட்டாா். நிகழ்வில், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு: ராமநாதபுரம் பள்ளிக் குழு மூன்றாமிடம்

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ கையொப்ப இயக்கம்

மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தவெக அரசின் நோக்கம்: அமைச்சா் க.விக்னேஷ்

தென்காசி அரசுப் பள்ளியில் மது போதை எதிா்ப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



