ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

காவிரி விவகாரம்; சட்ட ரீதியான அணுகுமுறையே சரியானது: ஜி.கே.வாசன்

காவிரி விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதே சரியான முறை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

News image

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:29 am IST

காவிரி விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதே சரியான முறை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

காவிரி விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவதுதான் சரியான முறை. அதில், நமக்கான நியாயமும், உரிமையும் கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி வங்கிகளில் மாணவா்களுக்கு கல்வி கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தமாகா, காங்கிரஸ் மற்றும் ஒருமித்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் சோ்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எங்கள் தனித்தன்மையுடன் கட்சியின் வளா்ச்சிக்காக பணியாற்றுகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.