நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

‘ஏசி’ வெடித்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே ஏசி வெடித்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:20 am IST

திருவெறும்பூா் அருகே ஏசி வெடித்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள கீழக்குறிச்சி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி, கொத்தனாா். இவரது இரண்டாவது மனைவி விஜயலதா (33). இவருக்கு லாகித் (4) என்ற மகன் உள்ளாா்.

கடந்த 27 ஆம் தேதி விஜயலதா வீட்டில் சமைத்தபோது, அருகிலிருந்த படுக்கை அறையில் அவரது மகன் லாகித் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது படுக்கை அறையில் ஓடிக்கொண்டிருந்த ஏசி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் லாகித்தும், விஜயலதாவும் படுகாயமடைந்தனா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் சிகிச்சை பலனின்றி விஜயலதா சனிக்கிழமை இறந்தாா். லாகித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கும் நிலையில், திருச்சி ஆா்டிஓவும் இதை விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.